search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிராக்டர்கள் பறிமுதல்"

    சாயல்குடி அருகே அரசு அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் அள்ளியவர்கள் தப்பிய சென்றதால் டிராக்டர்களை போலீசார் கைது செய்தனர்.
    சாயல்குடி:

    கடலாடி மலட்டாறு பகுதிகளில் தொடர்ந்து திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுவதாக புகார் வந்தது.

    அதன்பேரில் கடலாடி துணை வட்டாட்சியர் செந்தில்வேல்முருகன், கடலாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் ஆகியோர் தலைமையிலான போலீசார் கடலாடி ஆப்பனூர் பகுதியில் ரோந்து சென்றனர்.

    கடலாடி-ஆப்பனூர் நெடுஞ்சாலை வழியாக சென்றபோது கண்ணன் பொதுவன் விலக்கு ரோடு அருகே என்.பாடுவனேந்தல் கிராமத்தை சேர்ந்த தர்மலிங்கம் மகன் சண்முகநாதன் என்பவருக்கு சொந்தமான டிராக்டர் மற்றும் புரசங்குளம் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவருக்கு சொந்தமான பதிவு எண் இல்லாத டிராக்டர்களில் அரசு அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் அள்ளி வருவது தெரியவந்தது. டிராக்டர்களை ஓட்டி வந்த டிரைவர்கள் அதனை நிறுத்தி விட்டு இருவரும் தப்பி ஓடி விட்டனர்.

    இரு டிராக்டர்களும் கைப்பற்றபட்டு கடலாடி போலீஸ் நிலைய பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. துணை தாசில்தார் செந்தில்வேல் முருகன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேல்நடவடிக்கைக்காக பரமக்குடி சார் ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. #tamilnews
    திருக்கோவிலூர் அருகே மணல் கடத்திய வாலிபரை கைது செய்த போலீசார் 2 டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் அருகே உள்ள அருங்குரிக்கை கிராமத்தில் மணல் கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலையொட்டி திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் அங்கு அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த ஒரு டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது அனுமதியின்றி மணல் ஏற்றி சென்ற டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக டிராக்டரை ஓட்டி வந்த பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அரிகோவிந்தன் (வயது 25) என்பரை கைது செய்தனர். அடுத்து மொகலார் கிராமத்தில் கெடிலம் ஆற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்திய அதே ஊரைச் சேர்ந்த ராஜமாணிக்கம், அன்பழகன், மணிகண்டன் மற்றும் மேமாளூர் கிராமத்தைச் சேர்ந்த ஆகிய 4 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். 4 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் பாடியந்தல் கிராமத்தில் மணல் கடத்தியதாக ஒரு டிராக்டரையும் போலீசார் பறிமுதல் செய்தார்கள்.

    ஆண்டிப்பட்டியில் மணல் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்ப்பட்டி போலீஸ் சரகம் எஸ்.எஸ். புரம் ஓடை பகுதியில் மர்ம கும்பல் டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகளில் மணல் கடத்துவதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் சப்- இன்ஸ்பெக்டர் யாழிசைசெல்வன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது 2 டிராக்டர்கள் வேகமாக வந்து கொண்டிருந்தது. உடனே போலீசார் டிராக்டர்கள் வழிமறித்து சோதனை போட்டார். இதனை அறிந்த ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அந்த டிராக்டர்களில் மணல் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    உடனே 2 டிராக்டர்களையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. விசாரணையில் முத்தணப்பட்டியை சேர்ந்த முருகன், நாச்சியார்புரம் உதயகுமார் ஆகியோர் மணல் கடத்தியது தெரியவந்தது. இதில் முருகன் கைது செய்யப்பட்டார். உதயகுமார் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    சங்கராபுரம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வரஞ்சரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மணல் கடத்தல் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வரஞ்சரம் போலீசார் தீவிர ரோந்துபணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வரஞ்சரம் அசகளத்தூர் பகுதியில் டிராக்டரில் மணல் அள்ளிக்கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் சங்கராபுரம் அருகே உள்ள மலைகோட்டாலம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 20) என்பதும், அவர் டிராக்டரில் மணல் கடத்தியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மணிகண்டனை போலீசார் கைது செய்து டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் பகண்டை பகுதியில் உள்ள ஆற்றில் டிராக்டரில் மணல் அள்ளிக்கொண்டிருந்த ராயபுரம் பகுதியை சேர்ந்த டேவிட் (24) என்பவரை பகண்டை போலீசார் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
    ×